டெல்லியில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் பலியான நிலையில், அதன் உரிமையாளருக்கு மே 30-ஆம் தேதி வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி, டாக்டர் ஆகாஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர்களை மே 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.