பாலியல் புகார் வழக்கில் தலைமறைவான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மதச் சார்பாற்ற ஜனதா தள எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனிக்கு தப்பி சென்றுவிட்டதால், அவர் தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் பிரஜ்வல் ரேவண்ணா கைது பயப்படுவார் என்று கூறப்படும் நிலையில், வரும் 31ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்திற்கு கர்நாடக மாநில மக்களிடமும், தேவகவுடா குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.