திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டு ஊராட்சி மேட்டுக்கொள்ளை பகுதியில், பட்டியலின மக்களுக்கு மாற்று சமூகத்தினர் தொடர் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சின்னவேப்பம்பட்டு ஊராட்சி மேட்டுக்கொள்ளை பகுதியில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அங்கிருந்து தங்கள் வசிக்கும் பகுதிக்கு கழிவு நீர் செல்வதாக கூறி, மாற்று சமூகத்தினர் அந்த கழிவுநீர் கால்வாயை மண்ணைக் கொட்டி அடைத்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதிதிராவிடர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.