திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாட்டுத்தீவனத்தில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் ஐந்து மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அண்ணாவட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் 5 மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் மாட்டுக்கு தீவனம் வைத்துவிட்டு தூங்கச் சென்ற ராஜேந்திரன் காலையில் எழுந்து பார்த்தபோது 5 மாடுகளும் இறந்து கிடந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.