பீகார் மாநிலம் பாலிகஞ்சில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது திடீரென மேடை சரிந்ததால், அவர் உள்பட இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் தடுமாறினர்.
மேடை சரிந்ததும் சுதாரித்துக் கொண்ட ராகுல் காந்தி, அதைப் பொருட்படுத்தாமல் தொண்டர்களை நோக்கிக் கையசைத்தார். பின்னர் சகஜநிலைக்குத் திரும்பிய அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.