வேலூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததால் திருவோடு ஏந்தி பாமகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து திருவோடு ஏந்தி 50-க்கும் மேற்பட்ட பாமகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.