தனியார் வங்கியில் போலி ஆவணங்களைக் காட்டி பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆம்பூர் அருகே வெங்கிலி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் கடந்த 2019 -ஆம் ஆண்டு, போலி ஆவணங்கள் கொடுத்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
வாங்கிய கடனை ஐந்து ஆண்டுகள் ஆகியும் திருப்பி செலுத்தாத நிலையில் இது தொடர்பாக வங்கியின் தணிக்கைத்துறை அதிகாரி கார்த்திகேயன், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணன், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் வங்கியின் கடன் மேலாளர் ராஜி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.