புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செங்கீரை கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் விழாவை ஒட்டி, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மாடுகள் பங்கேற்றன.
மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், 34 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் திரண்டிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.