திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்ப்பேட்டையில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் 29 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி செல்லாண்டி அம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.