செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் கட்டிட நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை, கோயம்பேடு பகுதியில் எல் அண்ட் டி கட்டிட நிறுவனம் சார்பில் முன்பு 17 வகையான 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
தற்போது அங்கு CMDA கட்டிடப் பணி நடைபெற்று வருவதால் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகளை Lnt தனியார் நிறுவனம் சார்பில் தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிஎம்டிஏ அதிகாரி பார்த்திபன் மற்றும் தனியார் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.