தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த வந்த நபரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் நகரைச் சேர்ந்தவர் சூர்யாசெல்வகுமார், தனியார் நிதி நிறுவன கிளை இயக்குனராக பணியாற்றி வந்த இவர், நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைதாகிய நிலையில் ஜாமீனில் வெளிவந்தார்.
அப்போது, நிதிநிறுவன ஊழியர்களிடம் மறைமுக கூட்டம் நடத்தியதாகவும், அவர் தனது சொத்துக்களை வேகமாக விற்பனை செய்ததாகவும் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் சூர்ய செல்வக்குமாரை சிறைபிடித்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.