மதுரையில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவர் கடந்த 25-ம் தேதி தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவர் மாரிமுத்துவை கொலை செய்ததும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சங்கிலியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.