திருச்சியில் கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணுவ வீரர்கள் மலைவளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகளை கொன்று வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 25வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.