பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் காவல்துறையினரின் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.
அனைவரும் உரிய அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும் எனவும் செல்போன், மடிக்கணினி ஆகியவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று அவர் முகவர்களுக்கு விளக்கினார்.