திருச்சியில் கடந்த வாரம் கொத்தமல்லி கட்டு 60 முதல் 70 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 120 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், கடந்த வாரம் கிலோ 120 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் தற்போது 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்தது.
ஜூன் இறுதி வரை இதே விலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.