லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கிலில் தாக்குதல் நடத்தியது தங்களது தவறுதான் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஆளும் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அந்தக் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசினார்.
அப்போது கடந்த 1999-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் செய்து கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி, கார்கிலில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என்பதை நவாஸ் ஷெரீஃப் ஒப்புக்கொண்டார்.