கனடாவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டதைக் கண்டித்து, பிரின்ஸ் எட்வர்ட் ஐலாண்ட் மாகாணத்தில் இந்திய மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக திரவ உணவை மட்டும் எடுத்துக் கொண்ட அவர்கள், குடியேற்ற விதிகளை கனடா அரசு திரும்பப் பெறும் வரை எந்தவொரு உணவையும் இனி எடுத்துக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே குடியேற்ற விதிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் 50 பேர், தாயகம் திரும்பவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.