தேசிய குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய சிவகங்கை போட்டியாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில், தமிழக அணி சார்பாக பயிற்சியாளர் சுரேஷ்பாபுவின் தலைமையில் 102 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் முதல் முறையாக தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.