மணிமுத்தாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மணிமுத்தாற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மாட்டு வண்டியின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.