தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிலம்ப பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாரி கண்ணன் தம்மிடம் சிலம்ப பயிற்சி பெற்றுவந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடன் தெரிவித்த நிலையில், மாரி கண்ணனை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.