ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,
வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை , ஊடுருவல்காரர்கள் பறித்து வருவதகாக தெரிவித்தார்.
அவர்கள் குடியேற மாநில அரசு அனுமதிப்பதாகவும், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் அரசு மத்திய திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தவில்லை என்றும், வங்காளத்தை எதிர் திசையில் கொண்டு செல்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
உங்கள் ஒரு வாக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.