டெல்லி அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் கேஸ் பைப் லைனில் தீ பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
சாகேத், பர்யவரன் வளாகத்தில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீடுகளுக்கு கேஸ் கொண்டு செல்லும் குழாயில் தீ எரிவதை கண்டனர்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அவர்கள் கேஸ் செல்லும் மெயின் லைனை துண்டித்து 20 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீ விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.