வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகர் செல்லும் விஸ்தாரா விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
177 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி விஸ்தாரா விமானம் புறபட்டது. இந்நிலையில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விமானம் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியவுடன் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக விமான துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.