ரெமல் புயலால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியுள்ளதகாவும் அவர் கூறியுள்ளார். மாநில முதல்வர்கள் நிலைமையை கண்காத்து வருவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.