மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட தேர்தல் மூலமே மம்தா பானர்ஜி இரு முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக பாஜக மூத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக மம்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
வாக்குப்பதிவு வெளிப்படையாக நடைபெறுவதாகவும், அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுவதாகவும் கூறினார். இந்த முறை மேற்கு வங்க மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் முடிவை அளிக்கவுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.