பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதி அருகே ஆயிரத்து 60 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் போதைப் பொருள்களுடன் இரு ட்ரோன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
30ஆம் தேதி சிபி சந்த் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தும், மற்றொன்று கல்சியன் கிராமத்தின் புறநகர்ப் பகுதியிலிருந்தும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப்பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.