மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி தேசப்பற்று பாடலுக்கு நடனமாடிய ராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தூரில் யோகா மாணவர்கள் முன்னிலையில் பல்வீந்தர் சிங் என்ற ராணுவ வீரர், தேசிய கொடியை கையில் ஏந்தியபடி மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். ஆனால், பாடலுக்குதான் அவர் நடனமாடுவதாக கருதிய மாணவர்கள், அதைக் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல்வீந்தர் சிங், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.