தென்சீனக் கடலில் அத்துமீறக் கூடாது என சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினன்ட் மார்கஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பனிப்போர் நிலவும் சூழலில், தென்சீனக் கடலில் சீனா அத்துமீறினால் அதைப் போருக்கான அறிகுறியாக கருதி பதிலடி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்புப் படை தலைவர்களுக்கான மாநாட்டில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். இதில், அமெரிக்கா மற்றும் சீன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.