சிவகங்கையில் கடலில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்குடி சீனிவாசபுரத்தில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் சாமித்தோப்பு கடலில் குளிக்கும்போது காளி சிலை ஒன்றை கண்டெடுத்தார்.
இதனை தனது உறவினரான செல்வி என்பவரிடம் கொடுத்தார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சாமி சிலையை காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாலமுருகனுக்கு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு காவல் நிலையத்தில் காளி சிலை ஒப்படைக்கப்பட்டது.