டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விதமாக அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு மேல் யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யமுனையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட ஹரியானா மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல் யமுனை நதி வாரிய கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு உத்தரவிட்டதுடன், அதில் எடுக்கப்படும் முடிவு குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினர்.