தென்கொரியாவுக்கு ராட்சத பலூனில் குப்பைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியா எல்லையில் ராட்சத பலூன் மூலம் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகளை வடகொரியா கொட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தச் செயலை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ள வடகொரியா ராணுவ இணையமைச்சர் கிம் காங், முதலில் தென்கொரியாதான் இதுபோல குப்பைகளை வடகொரியாவில் கொட்டியதாக குற்றம்சுமத்தியுள்ளார்.