மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், கருணாநிதி தனது நீண்டநெடிய பொதுவாழ்வில், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
தானும், கருணாநிதியும் மாநில முதல்வர்களாக பதவி வகித்த காலகட்டத்தில், கலந்துரையாடிய தருணங்களை இனிமையோடு நினைவுகூர்வதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.