தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டில் இருந்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மரிய கிரிகோரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்து 30 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மரிய கிரிகோரி அளித்த புகாரையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.