பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அக்கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சத்துவாச்சாரியிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பாஜகவினர் வழிபாடு நடத்தினர், அதில் இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என 408 தேங்காய் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.