மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியிலுள்ள துணிக்கடையில் 62 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
நரிமேடு பகுதியில் அஜித் என்பவர் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அஜித் கடையை திறந்த படி விட்டுவிட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார்.
இந்நிலையில் கடையை நோட்டமிட்ட சிறுவன் கடைக்குள் நுழைந்து 62 ஆயிரத்து 500 ரூபாயை திருடி விட்டு தப்பி சென்றான்.
இச்சம்பவம் குறித்து அஜித் காவல்நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.