வேலூரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிளேபாய் எருதுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
வேலூர் மாவட்ட எருது விடும் போட்டியின் சங்கத் தலைவராக இருந்து வருபவர் பத்மநாபன். இவர் வளர்த்துவந்த பிளேபாய் என்கிற எருது, பல மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறை காரணமாக உயிரிழந்த எருதுக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.