மதுரையில் ஓட்டல் ஊழியர்கள் மீது பட்டா கத்தியால் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் அருகே உள்ள பிரியாணி கடைக்கு நால்வர் உணவருந்த வந்துள்ளனர்.
அப்போது ஹோட்டல் பணியாளர்களிடம் தண்ணீர் கேட்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், தங்களது நண்பர்களுடன் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டுவந்து பட்டாக் கத்தி, உருட்டுக் கட்டை ஆகியவற்றால் கடை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாட்டுத்தாவணி போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.