உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சனமங்கலம் பகுதியில் உள்ள தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.