புதுக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
அப்போது வெற்றி இலக்கை நோக்கி போட்டி போட்டுக்கொண்டு காளைகள் சீறிப்பாய்ந்தன. வெற்றிபெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.