புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதனுடன் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
இதனால் சொத்து வரி, வீட்டு வரி உயர வாய்ப்புள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-க்கும் மேற்பட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி போராட்டம் நடத்துவதாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.