நீலகிரி மாவட்டம், உதகையில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகை பகுதியில் இரவு நேரங்களில் புலி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் இரையை தேடி குடியிருப்புக்குள் வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், இப்பகுதியிலுள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்தது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.