மதுரையில் வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த டிடிஎப் வாசன், 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
மதுரை அருகே செல்போன் பேசியபடி காரை ஒட்டியதாக டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கில், 10 நாட்கள் காவல் நிலையத்தில் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தொடர்ந்து, 7-வது நாளாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து வாசன் கையெழுத்திட்டார். ஆனால், 10 மணிக்கு பதிலாக 20 நிமிடங்கள் தாமதமாக வந்து கையெழுத்திட்டார். பின்னர், டிடிஎப் வாசனுடன் ஏராளமான ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.