ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் கோயிலின் அக்னி தீர்த்த கடல் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் அச்சத்துக்கு ஆளாகினர். பின்னர் பிற்பகல் வேளையில் நீர்மட்டம் உயர்ந்து, அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.