புதுச்சேரியில் சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், தேவாலயத்தில் உள்ள மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ரயில் நிலையம் எதிரே தேவாலய வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது.
பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். மரம் விழும்போது அங்கு யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.