நீலகிரி மாவட்டம், உதகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தோடர் பழங்குடியினர் பாரம்பரிய கலாச்சார உடை அணிந்து நடனமாடினர்.
உதகை சூட்டிங் பாயிண்ட் பகுதியில், பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது தோடர் பழங்குடியினர் பாரம்பரிய கலாச்சார உடை அணிந்து நடனமாடியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சுற்றுசூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர்.