கேரளாவில் பயணியின் உயிரை காப்பாற்றிய நடத்துநர் பினுவுக்கு பாராட்டு குவிகிறது.
கேரளாவில் பேருந்து படிக்கட்டு அருகில் நின்று பயணித்த நபர், திடீரென பேருந்து வளைவில் திரும்பியதுபோது நிலைதடுமாறினார்.
அப்போது அவரது கையை பிடித்து நடத்துநர் பினு உயிரை காப்பாற்றினார். இந்தக் காட்சி பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி, வைரலாக பரவியது.
இதையடுத்து, நடத்துநர் பினுவை பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.