சென்னை வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடை பகுதியில், வியாபாரிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் மதுபோதை நபர் சுற்றி திரிந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கத்தியுடன் திரிந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அந்த நபர் மணி என்பதும், அவர் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து, ரவுடி மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.