காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெண்ணெய் சாப்பிடும் குழந்தை கண்ணனாக அலங்காரம் செய்யப்பட்ட வைகுண்ட பெருமாள், பல்லக்கில் எழுந்தருளினார்.
பின்னர் சுவாமி வீதி உலாவின்போது வழிநெடுங்கிலும் குழந்தை கண்ணனுக்கு பசும்பால், பழங்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் நைவேத்தியம் செய்தனர்.