கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சொந்தமான சென்னாம்பிகா இல்லத்தில் வைத்து அவரிடம் சிறப்புப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவை ஜூன் 10-ஆம் தேதி வரை சிறப்புப் புலனாய்வு பிரிவினர் காவலில் வைத்து விசாரிக்க ஹாசன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அவருக்குச் சொந்தமான ஹோலேநரசிபூர் சென்னாம்பிகா இல்லத்தில் வைத்து அவரிடம் சிறப்புப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.