திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தங்கைக்கு சாக்லேட் கொடுத்த நபரை தட்டி கேட்ட அண்ணன் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். ஆட்டோ ஓட்டுனரான இவருடைய தங்கைக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சாக்லேட் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் கேட்ட போது, அந்த இளைஞரின் உறவினர்கள் கத்தியால் தாக்கியுள்ளர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகாஷ் குடும்பத்துடன் சென்று புகார் அளித்துள்ளார்.